அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 24 வயதுடைய பிரவுன் எலக்ட்ரானிக் சிகரெட்டை வாங்கி தனது காருக்குள் அமர்ந்து அதனை புகைத்தார்.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதில் அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த பிரவுனுக்கு திடீர் பக்கவாதம் ஏற்பட்டதனை தொடர்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதால்தான் பிரவுன் உயிர் இழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து இதுவரை இரண்டு போர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.