இன்று காலை 6.30 மணியளவில் எல்பிட்டிய – குருந்தகஹஹேதேப்ம பிரதேசத்தில் உள்ள உப தபால் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த தபால் நிலைய அதிபர் உயிரிழந்துள்ளார்.
தீ விபத்தின் போது அலுவலகத்திற்குள் இருந்த நிலைய பெண் அதிபர் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.