(FASTNEWS| COLOMBO)- மாலைத்தீவு கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25ம் திகதி குறித்த மீனவர்கள் திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 04 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.