(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தொடரும் மழையுடனான காலநிலையை அடுத்து பதுளை மாவட்டத்தில் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹல்துமுல்ல, பசறை மற்றும் எல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியவகையில் இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி ஹாமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.