நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக எல்ல – வெல்லவாய வீதியில் மண் மேடு சரியக்கூடிய அவதானம் காணப்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக அந்த வீதியில் 24 மற்றும் 25 ஆம் Km தூண்களுக்கு இடையில் இந்நிலை காணப்படுவதாக எல்ல காவற்துறை தெரிவித்துள்ளது.
இதனால் அந்த வீதியில் வாகனங்களை செலுத்தும் போது அவதானமாக இருக்குமாறு காவற்துறை, சாரதிகளிடம் கோரியுள்ளது.