எல்ல – வெல்லவாய வீதியைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்…

இன்று(20) காலை இராவணா எல்ல பகுதியிலுள்ள வீதியில், கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளன.

இந்நிலையில், எல்ல – வெல்லவாய வீதியின் இராவணா எல்ல பகுதியை அண்மித்து கற்கள் சரிந்து வீழக்கூடிய அபாயம் காணப்படுவதால் அவதானமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

கற்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியூடான போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.