எளிமையான முறையில் திருமணம்…

பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோனேவுக்கும்ம், ரன்வீர் சிங்குக்கும் இத்தாலியில் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், திருமண தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமான சுமார் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எளிமையான முறையில் திருமணத்தை நடத்திவிட்டு, இந்தியா திரும்பிய பிறகு நடிகர், நடிகைகளை அழைத்து மும்பையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.