எவன்கார்ட் சர்ச்சை தொடர்பில் மற்றுமொரு விசாரணை

எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ரூக்ஷி் டயஸ் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், டிசம்பர் மாதம் 9ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச ஊழலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கப்பட்டது.