எவன்கார்ட் விவகாரம் தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு..

எவன்கார்ட் விவகாரம் தொடர்பிலான வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று(30) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றினை நடாத்திச் சென்று, அரசுக்கு 11.4 பில்லியன் ரூபா நட்டத்தினை ஏற்படுத்திய வழக்கின் சந்தேக நபர்களாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 08 பெரும் இன்று(30) நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.