கைது செய்யப்பட்ட எவன் கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் கப்பலின் உக்ரைன் நாட்டு தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காலி நீதவான் நீதிமன்றில் அஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எவன் கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் கப்பலின் தலைவரான உக்ரைன் நாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினார் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
சட்டவிரோத ஆயுத விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு, சந்தேகநபர் தற்சமயம் காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.