எவன்ட் கார்ட் கப்பலை விடுவிக்க வேண்டாமென பணிப்பு

எவன்காட் கப்பல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையும் வரையில் அதனை விடுவிக்க வேண்டாமென, பாதுகாப்பு அமைச்சு கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. 

அண்மையில் இலங்கை கடற்பரப்புக்குள் எவன்காட் கப்பல் ஒன்று பிரவேசித்தது. அதில் இருந்த கெப்டன் வழங்கிய தவறான தகவல்களையடுத்து கடற்படையினரால் குறித்த கப்பல் கைப்பற்றப்பட்டது. 

இது தொடர்பில் கடற்படையினரால் ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அது குறித்த அறிக்கை தற்போது பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி குறித்த  இந்தக் கப்பல் தொடர்பில் மூவரடங்கிய குழு மூலம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹேட்டிஆராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.