கொழும்பு எஸ்.எஸ்.சீ விளையாட்டு மைதானமானது நவீன மயப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இதனை ஆராய்ந்து பார்ப்பதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த மைதானத்தை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.