ஏப்ரல் 21 தாக்குதல் – சதுரவுக்கும் அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பாரளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை(18) பிற்பகல் 2 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சத்துர சேனாரத்னவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு இருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 54 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.