ஏழாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சம்பள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(02) ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.

ரயில் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இன்று(02) காலை 7 ரயில் சேவையில் ஈடுபடுத்தபபட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.