ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறித்த இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
மேலும், இன்று(06) இரவு நாட்டின் பல பாகங்களுக்கும் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தெற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.