(FASTNEWS|COLOMBO) இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 132 ரூபாவாகவும் 95 ஒக்டைன் பெற்றோல் 162 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டீசல் 113 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.