ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் வியாழன்(16) கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் என்பன தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
####