ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் நந்திமித்ர

திருடர்கள், மோசடிகாரர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்புமனு வழங்கினால் தான் மாற்று தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நேரிடும் என இராஜாங்க அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டால் தான் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் இருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திருடர்கள் மற்றும் மோசடிகாரர்களுடன் இணைந்தால் இந்நாட்டில் நல்லாட்சி நிலைநாட்ட முடியாதென்று அவர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

(riz)