அரசியலமைப்புக்கு முரணாக பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்று(30) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று(30) மதியம் 12 மணிக்கு கொள்ளுபிட்டிய சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை, பிற்பகல் 2 மணியளவில் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.