உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக வேட்புமனு தாக்கல் செய்ய எதிர்பார்போரது விண்ணப்பம் பெற்றுகொள்ளல், எதிர் வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்று கொடுத்த ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சிப் பீடத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பெப்ரவரி 29 ஆம் திகதியே இதனை இறுதிப்படுத்த தீர்மானித்தனர்.
எனினும், இதுவரை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் சிரிகொத்தவில் 14 ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.