2018 ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி, புலமைபரிசில் பரீட்சை நாடு முழுவதும் 3050 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
இம்முறை ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 5 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.