ஐந்து மாகாணங்களுக்கு இன்று இடியுடன் கூடிய மழை..

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று(14) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் குறித்த அந்த திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)