ஐஸ்லாந்தில் சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு…

ஐஸ்லாந்தில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விடுமுறையை கொண்டாடுவதற்காக ஐஸ்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர்.

பரந்த மணல் சமவெளிப் பகுதியான ஸ்கெய்தரசந்தூரில் உள்ள குறுகிய பாலத்தில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் பாலத்தை உடைத்துக்கொண்டு தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.