(FASTNEWS|COLOMBO)- 2 கிலோ 623 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
இன்று(08) அதிகாலை மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வருகை தந்த விமானத்தில் 25 வயதுடைய லாவோஸ் நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.