(FASTNEWS|COLOMBO)- மன்னார் போதை பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய ஐஸ் ரக போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் மன்னார் புகையிரத நிலையத்தின் அருகாமையில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் இருந்து 923 கிராம் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.