(FASTNEWS | COLOMBO) – ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபு பக்கர் அல் பக்தாதியை பிடிக்க பிரிட்டனின் எஸ்.ஏ.எஸ். சிறப்பு படையணி களமிறங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘உயிருடன் பிடிப்பது அல்லது கொலை செய்வது’ என்பதே குறித்த படை நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என கூறப்படுகின்றது.
சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர், உயிர்த்த ஞாயிறு தினமன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஐ.எஸ்.தலைவர், உரிமை கோரும் காணொளியை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.