ISIS நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் – ஜனாதிபதி

(FASTNEWS|COLOMBO)  நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கான பொறுப்பையும், புலனாய்வு பிரிவு பலவீனமடைந்தமைக்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று(26) காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடிப்படைவாத தீவிரவாதிகள் 130 பேர் நாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, அவர்களை கைது செய்து ஐ.எஸ் தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.