ஐ.எஸ் மற்றும் அல்கைதா அமைப்புக்களுக்கு நிதி கிடைக்கும் 6 வழிகள்

தீவிரவாத அமைப்புக்களான ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கைதா பேன்றவற்றுக்கு நிதி கடைக்கும் வழிமுறைகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளன.

இந்த அமைப்புகளுக்கு எவ்வாறு நிதி கிடைக்கினறது என்ற கேள்வி நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த அமைப்புக்களுக்கு நிதி கிடைக்கும் முக்கிய 6 வழிகள் குறித்த தகவல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

1. வரி(Taxation)

தாங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதி மக்களிடையே பல்வேறு முக்கிய வரிகளின் மூலமாக பணம் ஈட்டுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது ஐ.எஸ்.

2.எண்ணெய் வளம் (Oil)

எண்ணெய் வளம் ஐ.எஸ் அமைப்பிற்கு வருமானம் கிடைக்கும் முக்கியமான மற்றொரு வழிமுறையாகும். எண்ணெய் ஏற்றுமதி மூலம் ஐ.எஸ் அமைப்பிற்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

3. பிணைய கைதிகள் (Ransoms)

பல்வேறு நாடுகளை சேர்ந்த குடிமக்களை பிணையக் கைதிகளாக வைத்து கொண்டு மிரட்டி பணம் ஈட்டுகின்றது.

செப்டம்பர் 2013 முதல் செப்டம்பர் 2014 வரையிலான காலப்பகுதியில் பிணையக் கைதிகளுக்கு சுமார் 230 கோடியில் இருந்து 300 கோடி வரை பணம் கிடைத்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகின்றது.

4. நிதியுதவிகள் (Donations)

பல்வேறு குழுக்கள் மற்றும் அமைப்புகள் இவர்களுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன. இந்த நிதியுதவி பல்வேறு பெயர்களில் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறன.

5.பழம்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனை (Selling antiques and artifacts)

இதன்மூலம் ஐ.எஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் பணம் வந்து கொண்டிருக்கிறது.

6. Scamming banks

வங்கிகளில் கொள்ளை மற்றும் ஊழல் மூலமும் இந்த அமைப்புக்களுக்கு தொடர்ந்து பணம் வந்து கொண்டிருக்கிறது.