ஐ.சி.சி யின் தலைவர் – இலங்கை விஜயத்தின் பின்னணி என்ன?

(FASTNEWS|COLOMBO) – சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரான ஷஸங்க் மனோகர் நேற்றிரவு(22) இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்

குறித்த விஜயத்தின் போது, ஹோமகவில் புதிதாக அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இலங்கைகக் கிரிக்கெட் நிர்வாகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், கிரிக்கெட் போட்டிகளின் தொலைக்காட்சி உரிமங்கள் விற்பனைக் குறித்த விடயத்தில் கையாள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஐ,சி,சி, தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.