ஐ.தே.கட்சிக்கு மற்றுமோர் கரம் – சிலாபம் நகரசபைத் தலைவர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிலாபம் நகரசபைத் தலைவர் சட்டத்தரணி ஹிலரி பிரசன்ன பெனாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.

கடந்த இரண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் ஹிலரி பிரசன்ன பெனாண்டோ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

மேலும் இது குரித்துகருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு அமைய தமது ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஹிலரி பிரசன்ன பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

(riz)