ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று(21) மாலை 03.00 மணிக்கு கொழும்பில் தொடர்ச்சியான சத்தியாகிரக நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சத்தியாக்கிரகம் விகார மஹாதேவி பூங்காவில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.