ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று(10) நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாலை 4 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இதன் பிரகாரம், புதிய முன்னணியின் பொதுச் செயலாளராக பெயரிடப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு கட்சி செயற்குழுவின் அனுமதி கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.