ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(22) இடம்பெறவுள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளமை, பாலித்த தெவரப்பெரும புலத்சிங்கள தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியமை உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.