ஐ.தே.கட்சியின் பா.உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களது மாதச் சம்பளம் அனர்த்த மாணவர்களுக்கு..

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் ஒரு மாத சம்பளத்தை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சேகரிக்கப்படும் பணத் தொகை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியிருந்தார்.

 

(rizmira)