ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த இந்த குழு அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று(02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்த்தல் குறித்து பேசப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை களைவது குறித்து இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.