ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து தீர்மானிக்க நாளை மறுதினம் (29) கட்சியின் செயற்குழு கூடவிருந்த நிலையில், அந்நாளில் அது குறித்து கலந்துரையாடாது பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றி பெறுவது குறித்து கலந்துரையாட உள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ம் திகதி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்றும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-Rishma