ஐ.நா.பொதுச் செயலாளருடன் ஜனாதிபதி உரையாடல்…

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குடரெஸ் உடன் தான் தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

புதிதாக வழங்கப்பட்ட பிரதமர் நியமனமானது தற்போது நாட்டில் இருக்கின்ற அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே வழங்கப்பட்டது என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.