2019 ஐ.பி.எல். போட்டியில் பதிவு செய்யப்பட்டுள்ள 1003 வீரர்களில் தெரிவு செய்யப்படும் 346 பேர் எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறும் ஏலத்தின் சுருக்கப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இலங்கை வீரர்கள் 07 பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஏஞ்சலோ மேத்யூஸ், லசித் மாலிங்க, குசல் பெரேரா, திசர பெரேரா, ஜீவன் மென்டிஸ், தசுன் ஷானக மற்றும் இசுறு உதான ஆகிய வீரர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.பி.எல். போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி முதல் மே மாதம் 19ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.