ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று(24) காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இதற்காக, கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, கூட்டமைப்பின் அனைத்து பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கட்சியினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் நிகழ்கால அரசியல் நிலைமைகள் இங்கு கலந்தோலோசிக்கப்படவுள்ளதாக ஷாந்த பண்டார குறிப்பிட்டார்.