ஐ.ம.சு.முன்னணியின் மற்றுமொரு உறுப்பினர் ஐ.தே.கட்சியில் இணைவு…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் திலின பண்டார தென்னகோன் ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவர் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக குறித்த கட்சி மேலும் தெரிவித்துள்ளது.