ஒப்பந்தங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும்

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கிடையில் தற்போது இருக்கும் ஒப்பந்தம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

குறித்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட வேண்டி இருந்தும் தற்போதைய அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த சங்கத்தின் உப தலைவர் கே.செல்வராஜ் தெரிவித்தார்.

இந்த நிலைமை காரணமாக தோட்ட தொழிலாளர்கள் வேலையில் இருந்து விலகும் அபாயம் இருப்பதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் உப தலைவர் கே.செல்வராஜ் தெரிவித்தார்.