ஒருகொடவத்தை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து…

ஒருகொடவத்தையில் தேயிலை விநியோகத்திற்காக பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், தொழிற்சாலை அண்மையிலிருந்த 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிரதேசவாசிகள் மற்றும் கிரண்டபாஸ் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில்,சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.