கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவற்றின் பெறுமதி சரியாக மதிப்படப்பட முடியவில்லை என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக லிபியாவுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.