ஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

878 கிராம் நிறையுடைய ஐஸ் வகை போதைப் பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் வகை போதைப் பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது