(FASTNEWS|COLOMBO) – சட்டவிரோதமான முறையில் டுபாயில் இருந்து இலங்கைக்கு சிகரட் தொகை ஒன்றை கடத்தி வந்த குற்றச்சாட்டில் விமான நிலையத்தில் வைத்து 04 பேர் கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தங்களது பயணப்பொதிகளில் மறைத்து, 53 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளை கடத்தி வந்துள்ளனர்.
கைதானவர்கள் சிலாபம் மற்றும் வென்னப்புவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.