ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலம் விரைவில்

ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான உத்தேச சட்டம் சட்டவாக்க குழுவினால் இந்த உத்தேச சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்பு அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அனுமதி பெற்றுக்கொள்ளப்படும்.
இது குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
இதற்கமைய 1988ம் ஆண்டு இரண்டாம் இலக்க மாகாணசபை சட்டத்திலும் அரசியல் சாசனத்திலும் திருத்தங்கள் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.