ஒரே நாளில் 35 படகுகள் இனந்தெரியாதோரால் தீக்கிரை…

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நீலபொல பகுதியில் 35 படகுகள் இன்று (07) அதிகாலை இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட படகுகளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.