ஒரே பிரசார மேடையில் மஹிந்த, மைத்ரி சந்திப்பர் – துமிந்த

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் மேற்கொள்வர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இருவருக்கும் இடையில் தற்பொழுது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ள அவர், சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு இருவரும் இணைந்து செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(riz)