ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.

குறித்த நிகழ்வு மார்ச் 12 இயக்கம் இதனை ஏற்பாட்டில் ஒக்டோபர் 5ஆம் திகதி சுகததாஸ உள்ளக அரங்கில் நடத்தப்படவுள்ளது.

இதற்காக ஜனாதிபதி வேட்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.இவர்களிடம் ஐந்து முக்கிய விடயங்களுக்கான தீர்வுகள் குறித்து விளக்கங்கள் கோரப்படவுள்ளன.

இதேவேளை, தேர்தல்களில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் இதுவரை காலமும் ஒரே மேடையில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.