ஓடுபாதையிலிருந்து மீள அழைக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

இந்தியா, திருச்சியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கவிருந்த யுஎல் 134 ஸ்ரீலங்கன் விமானம் ஓடுபாதை வரை சென்றிருந்த வேளையில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக மீள அழைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இதன் காரணாக பயணிகள் இறக்கப்பட்டு பொறியியலாளர்களினால் குறித்த விடயம் சரி பார்க்கப்பட்ட பின்னர் மூன்று மணி நேர தாமதத்தின் பின் விமானம் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளது அண்மைக்காலமாக ஸ்ரீலங்கன் விமானங்கள் தொடர்ச்சியாகப் பல தொழிநுட்பக் கோளாறு விடயங்களில் சிக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது